வரம்

Vinkmag ad

அன்போடு அழைக்கும் அம்மா என்ற சொல்லும்

பொய்த்துபோகிறது அனாதை சிறார்களிடம்…

ஆளும் ஆதிக்கமே அள்ளி அணைக்க மறுக்கிறது இனசுழற்சியின் பிரிவால்….

ஈகை கொண்டு மலரவைக்கும் மனமில்லா இந்த சொற்ப உலகில்

ஒரு பிடி சோறு ஊட்ட மனமில்லா மனிதம் தழைத்துவிட்டது…

எட்டு திசையும் மக்கள் வசித்தாலும் ஏக்கமிகு

குழந்தை நிலை அறியா மனமே ….ஐயகோ….

ஒயாது பாடு பட்ட சுதந்திரம் தான் உதவாது போனதே தற்போது…

இடைவிடாது துதி ஓதப்படும் கடவுள் நேரே வந்தால் கேட்பேன் ஒருவரம்.

பசியில்லா மனிதனை படைக்க மாட்டாயா என்று.

சோ.பிரசன்னா
தஞ்சாவூர்..

News

Read Previous

கூடும் நேரம் கோடி நலம்

Read Next

சுமை

Leave a Reply

Your email address will not be published.