கூடும் நேரம் கோடி நலம்

Vinkmag ad

கூடும் நேரம் கோடி நலம்

நிம்மதியில்லா மண்ணில்
நிலையில்லா வாழ்க்கை,

நீதியில்லா நிலத்தில்
நிம்மதியும் விளையுமோ..?

சாதியாளும் சதுப்பில்
நீதியும் சாத்தியமோ..?

சதிநிறை மதியோங்க
கதியிழக்கும் சிறுபான்மை,

அகதிகளாய் அவதியாகி
அழைகின்றார் அகிலமெங்கும்,

அத்தனையும் அறிவுணர்ந்த
வல்லமைகள் வழக்கறியும்,

இருந்தபோதும் சுயநலத்தால்
மறந்தவிடும் நிலைகாணும்,

நீதி கேட்டால் தேசத்துரோகம்,
நிறைந்தவன் கையோங்கும் ,

வீரங்கள் எங்குமுண்டு
ஈகங்கள் என்றாக,

துரோகமே தொல்லையாகி
தொலைத்துவிடும் ஈகங்களை,

சத்தியமே வெல்லுமென்ற
உத்தமர்கள் சொன்னவொன்றே

சரித்திரம் ஆகுமெங்கும்
சத்தியமே நம்பிடுவோம்,

ஆட்டமும் அடங்கும்
அதுவும் கடக்கும்,

ஊட்டமிது உள்ளமானால்
நாட்டமது நடந்தே தீரும்.

நாளை நமதென்ற
நம்பிக்கையே நயமாகும்.

கூடும் நேரம் கூடிவரும்
கோடி நன்மைகளும் கொண்டுவரும்.

வாடும் நிலையும் மாண்டு போக
வாழும் நிலையும் சுகமும் ஆகும்.

உறுதியான நெஞ்சம்
இறுதியில் வெல்லும்.

மைசூர் இரா.கர்ணன்

News

Read Previous

சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

Read Next

வரம்

Leave a Reply

Your email address will not be published.