புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே !
புத்தாண்டு வருகவே ! புத்துணர்வை தருகவே !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…!
புத்தாண்டு “முஹர்ரம் ” புத்துணர்வை தந்திட
இன்னல்கள் நீங்கிட
இன்பங்கள் பெருகிட
தொல்லைகள் இல்லா
நல்வாழ்வு கிடைத்திட
அல்லல்கள் அகன்றும்
அழகியதொரு நிகழ்வும்
அனுதினம் இறையிடம்
வணக்கம் நிகழ்ந்தேறிட
அல்லாஹ்வின் தர்பாரில்
நம்முடைய நல்அமல்கள்
எல்லாம் அங்கீகரித்திட
நற்கூலிகள் அவனாலே
ஆசீர்வாதம் அளிக்கப்பட
நல்லடியார் கூட்டத்திலே
அடியானாக உயர்ந்திட
வல்ல ரஹ்மானிடத்தில்
இனிது வேண்டிடுவேன் !
பிறந்திருக்கிற ஹிஜ்ரி புத்தாண்டில் ஏகநாயன்
இறைவன் உலகினிலே
வாழ்ந்திடும் முஸ்லிம்கள்
அனைவருக்கும் அன்பும்
கருணை பாரபட்சமின்றி
ரிஜிக்கென்ற படியளந்து
நோய் நொடிகளில்லாத
பாதையில் பயணிக்கச்
செய்திட வேண்டிடுவேன் !
உற்றார் உறவினர்ளைக்
கொண்டாடி மகிழ்வோம்
இக்காலச் சக்கரத்தின்
சுழற்சியின் பாதையில்
நேசத்தின் வேர்களாக
பாசத்தின் விழுதுகளாக
நம்முடைய இதயத்தைச்
சுற்றிச் சூழ்ந்திருக்கும்
உறவுகள் அவர்களோடு
வாசமான பாசத்தினால்
ஆழமான அன்பினால்
பாரபட்சமும் காட்டமலே
பகிர்ந்தும் சிறப்போம் !
சிறுகதையாய் தொடரும்
நம்பயணம் தொடர்கதை
எந்நாளும் தொடர்ந்திட
நெஞ்சத் தாழ்வாரத்தில்
அன்பென்ற ஊஞ்சலில் அமர்த்தியும் பண்புடனே
கூடியாடியே மகிழ்வோம் !
இன்சுவை கொடுத்திடும்
நற்கனிகளாய் விடியல்
கண்டிடும் வெள்ளியின் நன்னாளில் கனிவான
சொற்கனி சுவைகளாய் சோர்வின்றி பரிமாறியே
மகிழும் நல்லடியானாக
வாழ்ந்திட முற்படுங்கள் !
புத்தாண்டுத் தொடக்கம்
புலர்ந்திட்ட நன்னாளாம்
இன்றைய ஜும்ஆநாள்
உங்களுக்கும் எனக்கும்
செழிப்பாய் சிறக்கட்டும் !
சிறுபான்மை சமூகமாய்
சிறப்புடனே வாழ்ந்திடும்
இஸ்லாமியச் சமுதாயம்
இன்னலின்றி வாழட்டும் !
தனியோனாம் அல்லாஹ் !
நல்லருளை பொழியட்டும் !
முழுமுத்தான பாசமிகுந்த
என்னுறவுச் சொந்தங்களே ! முஸ்லிம் சகோதரர்களே ! என்னுடைய அருமையான
அன்புஸலாம் உண்டாகட்டும் ! அல்லாஹ்வின் பேரருளும்
கருணையும் நிறையட்டும் !
— கொடிநகரான்.