நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !

Vinkmag ad

 

( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் )

நினைவு யாவும் உங்கள்மீது

யா ரசூலல்லாஹ்

நீங்களின்றி நாங்களேது

யா ரசூலல்லாஹ்

அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி

அகில மெங்கும் ஒளிதெளித்த

யா ரசூலல்லாஹ்

                          -நினைவு

மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்

மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்

நதியென அருட்கடலில் நான் விழுவேன்

நபியே கதியென்றங்கு நான் அழுவேன்

எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே

பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே !

-நினைவு

காணும் வரையில் கண்கள் தூங்காது !

காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது !

வானில்லாமல் நிலம் வாழாது

வாடல் தொடர உள்ளம் தாங்காது !

ஒளியைத் தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்

உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன் !

       -நினைவு

உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்

உம்மி ரசூலே உங்கள் புகழ்பாடும் !

அருளாய் வந்திலங்கும் மறைமூலம்

அல்லாஹு போற்றும் மனித அனுகூலம் !

இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதயதீபமே

இறுதித் தூதராகவந்த இறையின் ஞானமே !

                             -நினைவு

 

 

( காதில் விழுந்த கானங்கள் என்ற நூலிலிருந்து )

News

Read Previous

ஏன் இப்படி செய்கிறது எஸ்.பி.ஐ.?

Read Next

பார்வையற்றவர்களுக்கு பார்வை தருவோம்…!

Leave a Reply

Your email address will not be published.