திருக்குறளே தேசிய நூல்

Vinkmag ad

 

 

பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும்

பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில்

செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல்

பொய்யா மொழியிலையிப் பார்.

 

திருக்குறளே தேசியநூல் தொல்லுலகில் வாழ்வோர்

இருபேறும் பெற்றுய்ய ஏற்ப – பெருமான்

பெருங்கடல்க ளேழும் பரந்தவா னேழும்

குறுக்கிப் புகுத்தியசெம் பா.

 

இல்லாத தொன்றில்லை இப்புவியோர் என்றென்றும்

நல்வழியில் பாதம் நிலைநிறுத்த – வெல்லாச்சொல்

கோத்தளித்தார் வள்ளுவனார் கோனானார் ஊழிவரை

பாத்தமிழ் செய்வாருள் தான்.

 

பன்மொழிகள் தம்வசமாய்ப் பற்றி அவைமொழிவோர்

இன்புற்றே இல்லறத்தில் ஏற்றமுறச் – சொன்னஐயன்

தீர்க்க தரிசனத்தைச் செப்பச்சொல் லுண்டாமோ

பார்கொள் பொதுநூல் குறள்.

 

நூறு மதங்கள் நிலைத்தாலும் அவ்வவைகள்

கூறுகின்ற போதனைக்குக் கோதறவே – ஆறறிவு

மாந்தர்க் குரைத்துள்ளார் முற்றும் பொதுவாகும்

தீந்தமிழின் வேந்தர் தெளிந்து.

 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

இலங்கை

News

Read Previous

உணவே மருந்து : குளிர்பானங்கள் குடிக்கலாமா ?

Read Next

திருக்குறள் தேசிய மாநாடு

Leave a Reply

Your email address will not be published.