இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

Vinkmag ad

z1 z2 z3இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்
இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆவார்.
இவரது மகன் ஜுபைர் அஹமத். இவர் துபாயில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.
தற்போது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக
முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் வருவதை முன்னரே அறிந்து கொண்டு தேவையான
சிகிச்சைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் அவரது குடும்பத்தினர்
அனைவரும் பங்கேற்றனர்.

ஜுபைர் அஹமத் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் முதுகுளத்தூர் நகருக்கு
பெருமை சேர்த்துள்ளார்.

இந்த ஆராய்ச்சியின் பயன் அனைவருக்கும் கிடைப்பதுடன் புற்றுநோயால் உயிரிழப்பு
இல்லாமல் தடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜுபைர் அஹமதுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

ஜுபைர் அஹமது தந்தை தொடர்பு எண் : +971 55 414 2300

News

Read Previous

எல். ஆர். ஈஸ்வரி 80

Read Next

திருக்குறளும் சட்டமும்

Leave a Reply

Your email address will not be published.