ஓய்வுபெற்ற அதிகாரி, வக்கீல் மோதல்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே ஆத்திகுளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை பி.டி.ஓ., வீரபத்திரன். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த வக்கீல் ராஜாவுக்கும் முன்பகை இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப்பள்ளி எதிரே வந்த வீரபத்திரனுக்கும், வக்கீல் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், வக்கீல் ராஜா, இவரது உறவினர் சசி ஆகிய இருவரும் சேர்ந்து, வீரபத்திரனை தாக்கியுள்ளனர். இரு தரப்பினர் மீதும் முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.