வானம் வசப்படும்
வானம் வசப்படும் ********************* மழைத் தூறலில் சிதறி தெறிக்கிற கரையான் புற்றில் வாழ்விற்கான தேடல் இன்னமும் மிச்சமிருக்கிறது…. இறகு விரித்த சிறு பொழுதில் வாஞ்சையோடு ஈசல் கூட வாழத்தான் செய்கிறது வாழ்க்கையை கனப்பொழுது கொண்டாட்டமாய்… பத்தடி தூரமே பாரமாய் இருக்கலாம் வண்ணத்துப்பூச்சியின் மென்மைக்கு… தன்னை ஒருபோதும் தாழ்வாய்க் கருதவில்லை…