வானம் ஏன் வளைந்து கிடக்கிறது?
வானம் ஏன் வளைந்து கிடக்கிறது?
கண்போல் பூமியைக் காக்க வளைந்ததோ
விண்மீன் வரவை பார்க்க வளைந்ததோ
தண்டலை ஓசையைக் கேட்க்க வளைந்ததோ!
பண்பலை இசையிலே மயங்கி வளைந்ததோ 4
வெட்கம் மேலோங்கி நெளிந்து வளைந்ததோ!
பக்கம் யாருளர் எனப் பார்க்க வளைந்ததோ
சொர்க்கம் இதுவென சொக்கி வளைந்ததோ
தர்க்கம் எதற்கென வளைந்து கொடுத்ததோ 8
எல்லையிலா பூமியை எட்ட வளைந்ததோ
நிலையில்லா மனிதரை நிமிர்த்த வளைந்ததோ
விலையில்லா பொருட்களை வாங்க வளைந்ததோ
கலையெல்லாம் கற்றதை காட்ட வளைந்ததோ 12
ஊனம் ஏற்பட்டால் உடலில் பலங்குறையும்
மானம் அழிந்திட்டால் மாண்பு மறைந்துவிடும்
நோன்பு இருந்திட்டால் மாண்பு திரும்பிடுமா!
தானமும் தவமுமே மாண்பினைக் காத்திடும் 16
வானம் பொய்த்திட்டால் பூமியில் வளங்குறையும்
சாமி வரங்கொடுத்தால் பூமி வளம்பெறுமா?
பூமியில் வளம் பெருக தானம் பெருகிடணும்.
தானம் தருவதற்கு ஊரார் வரிப்பணமா ! 20
குளத்தில் குளித்துவிட்டு கோயிலில் அர்ச்சித்தால்
களத்தில் வென்றிடலாம் நிஜத்தில் நிம்மதியா?
ஊர்மக்கள் வரிப்பணத்தில் உல்லாசங் காண்போரை
வேரறுத்திடவே வானம் வளைந்து கிடக்கிறது. 24
படைப்பு
தி.ஆறுமுகம்,
பிருந்தாலயா,
239, பெரிய தெரு,
திருநெல்வேலி நகரம்.
கைபேசி: 9843503990.
Tags: வானம்