சில கதைகளும் படிப்பினைகளும் # மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டுச் சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்குப் போதும். அவனுக்காக வாழப் போகிறேன். இன்னொரு துணை எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார். வருடங்கள் உருண்டோடியன. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார். ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக…