சில கதைகளும் படிப்பினைகளும்
சில கதைகளும் படிப்பினைகளும்
# மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும் உறவினர்கள், நண்பர்கள்
அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால்
அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டுச் சென்றிருக்கிறாள்.
அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில்
அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்குப் போதும்.
அவனுக்காக வாழப் போகிறேன். இன்னொரு துணை எனக்குத் தேவையில்லை
என்று சொல்லிவிட்டார்.
வருடங்கள் உருண்டோடியன. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும்,
வியாபாரத்தையும் மகனிடம் எழுதிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார்.
மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார்.
ஒரு வருடம் போனது.
ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண,
மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார்.
மருமகளோ , வெண்ணை தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்.
மகன் அதைக் கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார, தகப்பன் வெறும்
ரொட்டித் துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்.
மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணை கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்றும் பேசாமல், மகன் தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான்.
அந்த வெண்ணையைப் பற்றிய சிந்தனையே அந்நாள் முழுதும் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான்.
அப்பா வாருங்கள் நாம் வக்கீலைப் பார்த்துவிட்டு வருவோம் என்றான்.
ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க…நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு
குடி போகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும் , உங்கள் பெயருக்கே
மாற்றிக் கொள்ளுங்கள். இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன். மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டுப் போகிறேன், என்றான்..
ஏன் இந்த திடீர் முடிவு?.
இல்லை அப்பா
உங்கள் மதிப்பு என்னவென்று என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சாதாரண வெண்ணைக்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது. ஒரு பொருளைப் பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவள் உணர வேண்டும். மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்…
பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ஏடிஎம் கார்டாக இருக்கலாம்..
ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும்
என்பதே இந்த கதையின் கருப்பொருள். பெற்றவர்களைப் புறக்கணிக்காதீர்கள்.
அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை.
# வேறு சில குடும்பங்களில் நடப்பதையும் நாம் பார்க்கிறோம். வயது வந்த மகன் அல்லது மகளின் சொந்த விருப்புகளை அறவே புறந்தள்ளும் (குறிப்பாக திருமண விஷயத்தில்) பெற்றோர்களும் இருக்கின்றனர். அதைப் பற்றிய நிகழ்வுகள் ஆணவக் கொலை வரை நீள்கின்றன.
# யாராக இருந்தாலும் மற்றவர் கருத்துக்கு நாம் உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம். பிறர் கருத்தைக் கேட்டுவிட்டு பிறகு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
ஒரு கருத்தில் நாம் உறுதியாக இருப்பது என்பதும் பிடிவாதமாக இருப்பதும் ஒன்றல்ல. எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று தான் கொண்ட கருத்தில் நிலையாக நிற்பதுதான் உறுதி. எத்தனை பேர் எடுத்துச் சொன்னாலும் தன் தவறைத் திருத்திக் கொள்ளாமல் நிற்பது பிடிவாதம்.
இப்படி வாழ்க்கை நமக்குப் பல படிப்பினைகளை நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது!
கற்றுக் கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும் நம் விருப்பம்,