துபாயில் தமிழக பிரமுகருக்கு விருது

Vinkmag ad
m1துபாயில் தமிழக பிரமுகருக்கு விருது
துபாய் : துபாய் முத்தமிழ்ச் சங்கம் ஈவெண்ட்ஸ் சார்பில் அமீரகத்தில் தமிழகம் சிறப்பு நிகழ்ச்சி அல் நாசர் லெசர் லேண்டில் நடைபெற்றது.
இந்த பிரமாண்ட  நிகழ்ச்சியில் இந்தியாவில் முதன் முறையாக எலெக்ட்ரிக் ஆடோக்களை அறிமுகம் செய்துள்ள
சென்னை எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் நிறுவன தலைவர் மன்சூர் அலி
கானுக்கு ‘எலெக்ட்ரிக் தமிழன் விருது‘ வழங்கப்பட்டது.
இந்த விருதை தமிழகத்தின் முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி
வழங்கி கவுரவித்தார். மிகவும் இளம் வயதில் எண்ணத்தில் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து
சாதானை செய்துள்ள மன்சூர் அலி கான் இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
இந்த விழாவில் பிரபல இசையமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, மாகாபா ஆனந்த், அறந்தாங்கி நிஷா
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த விழாவை பார்த்து ரசித்தனர்.

News

Read Previous

மன உறுதி

Read Next

ரோஜாராணி

Leave a Reply

Your email address will not be published.