1. Home
  2. பயனுள்ள தகவல்கள்

Category: மேலும்…

கீழக்கரை கிளாசிபைட் கன்சல்டன்சி விசிட் விசா சேவை!

கீழக்கரை கிளாசிபைட் கன்சல்டன்சி விசிட் விசா சேவை! துபாய்க்கு குறைவான கட்டணத்தில் விசிட் விசா! எமிரேட்ஸ் ல் பணிபுரியும் அன்பு தமிழ் சொந்தங்களே உங்கள் தாய் , தந்தை, மனைவி ,குழந்தைகள், உறவினர்கள் , நண்பர்களை விசிட் விசாவில் அழைக்க விருப்பமா,கீழக்கரை கிளாசிபைட் கன்சல்டன்சி இந்த அரிய சேவையை…

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..? காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்கள். ஏற்கனவே காலாவதியாகி இருந்தால்…

திருச்சி மாநகரில் உங்கள் கனவு இல்லம் கட்ட நல்லதொரு வாய்ப்பு !

திருச்சி மாநகரில் உங்கள் கனவு இல்லம் கட்ட நல்லதொரு வாய்ப்பு !   திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் BHEL துவாக்குடி சுங்கச்சாவடி அருகில் அரசு அனுமதி பெற்ற காலி மனைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளன.   மேலும் திருச்சி தில்லை நகரின் மையப்…

துபாய் தேரா பகுதியில் அறை வாடகைக்கு தேவை

துபாய் தேரா பகுதியில் அறை வாடகைக்கு தேவை துபாய் தேரா பகுதியில் எக்ஸிகியூடிவ் ஊழியர் தங்க அறை வாடகைக்கு தேவை தொடர்புக்கு : 050 745 8771

குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை..!

**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. **தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. **தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க…

நெய்ப்பொங்கல்

 கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்)  கூடாரவல்லி!(நெய்ப்பொங்கல்) தேவையான பொருள்கள்: அரிசி – 1 கப் பயத்தம் பருப்பு – 1/4 கப் வெல்லம் – 2  1/2 கப் ஏலப்பொடி – 2 டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் – சிறிது மற்றும் பால் பால் பால் பால்… நெய் நெய் நெய் நெய்… செய்முறை: அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் கழுவி, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில்2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பின் 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும். வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக்கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும். இறுக இறுக மேலும் மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க ஆரம்பிக்க வேண்டும். நெய், நெய், நெய் மேலும் நெய்…போதும் என்று [நாம்:-)] முடிவு செய்யும் போதுஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கலாம். * “நெய்யுண்ணோம்.. பாலுண்ணோம்” என்று மார்கழி 2ம் நாள் ஆரம்பித்த நோன்பை, “…அதன்பின்னே பால்சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார..” என்று கூறி 25நாள்களாகத் தவறவிட்ட நெய் பாலையெல்லாம் மார்கழி 27ம் நாள் கணக்கில்ஆண்டாள் எழுதிவிட்டாள். பாலிலேயே அரிசி சமைக்கப்பட வேண்டும். அதுவேமூடப்படும் அளவு அதன்மேல் நெய் ஊற்றப்பட வேண்டும். சமைத்தபின் அக்காரஅடிசிலைக் கையில் எடுத்தால் நெய் முழங்கை வழிவார ஒழுக வேண்டும். இதுஆண்டாள் இந்தப் பாட்டில் தந்திருக்கும் ரெசிபி. அப்படியெல்லாம் பால், நெய்யைக் கொட்ட நாம் ஆயர்பாடியிலோ,ஸ்ரீவில்லிபுத்தூரிலோ இல்லை என்பது முதல் காரணமென்றாலும், நமது தேகம்தாங்காது என்பது அதைவிட முக்கியமான காரணம். உங்கள் வீட்டுக்காரர்களிட(மு)ம்நல்லநாளில் தயவுசெய்து எனக்குத் திட்டு வாங்கித் தராதீர்கள். அவ்வளவு பால் நெய்தேவையில்லை. அவரவர் விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளவும். அதனால்தான்தேவையான பொருள்களில் பால் மற்றும் நெய்யின் அளவைக் குறிப்பிடவில்லை. * குக்கரில் வைக்கும் போது 5 கப் பாலிற்குப் பதிலாக 3 கப் பால் மற்றும் 2 கப் நீராகக்கலந்து வைக்கலாம். ஆனால் பின்னால் கிளறும் போது பால்தான் சேர்க்க வேண்டும். * வாணலியில் கிளற ஆரம்பிக்கும் முன்பே வெல்லக் கரைசல், வேக வைத்தசாதக்கலவை, பால் ஆகியவற்றைக் கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டுவிடுதல்நலம். இல்லாவிட்டால் பின்னால் சமாளிப்பது சிரமம். மேலும் விவரங்களுக்கு : http://jaghamani.blogspot.com/2014/01/blog-post_10.html https://mykitchenpitch.wordpress.com/2007/01/11/akkaara-adisil-maargazi-27/    …

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன் படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப்…

மொபைல் இன்ஷூரன்ஸ் பற்றி தெரியுமா??

புதிதாக வாங்கும் செல் போன்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். ஒரு செல்போனுக்கு அதிக பட்சம் 3வருடங்கள் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும். அதற்கு மேல் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கும் போது இன்ஷூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் வரும். செல் போனின் மதிப்பில் 2-லிருந்து 3 சதவிகிதம் தான் பிரீமியம் இருக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது…

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!

“ஹேங்” – சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது! இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’…

பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்

இன்சூரன்ஸ்பாலிசி யின் முதிர்வு தொகைபெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர்சேவைப்பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின்அடிப்படையில், பாலிசி முதிர்வுகுறித்ததகவல்கள், மூன்று அல்லது ஆறுமாதங்களுக்கு முன்பே, கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாக, பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும். அந்த சமயத்தில், அதை, ‘கிளைம்’ செய்யவில்லை எனில், அதன் பின், மூன்றுஆண்டுகளுக்குள், எப்போது வேண்டுமானாலும் பாலிசிப்பத்திரத்தை இன்சூரன்ஸ்நிறுவனத்தில் கொடுத்து, பாலிசிதாரர் அல்லது அவரின் வாரிசுகள்கிளைம் செய்யலாம்.பாலிசிப் பத்திரத்தை, பாலிசி எடுத்த கிளையில்சமர்ப்பித்து, முதிர்வு தொகையை பெறலாம்.மூன்றுஆண்டுகள் வரை, கிளைம் செய்யாமல் இருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள்,எல்.ஐ.சி.,யின் மத்திய அலுவலகத்துக்குஅனுப்பப்படும். இந்த பாலிசி தொகைகள்அனைத்தும்,தனியாக ஒரு வங்கிக்கணக்கில் பராமரிக்கப்படும். இந்தக் கணக்கிலிருந்தும்,பணத்தைபாலிசிதாரர் அல்லது வாரிசுதாரர் பெறமுடியும். சிலர், பாலிசி பத்திரத்தை தொலைத்து விட்டதாலும், பணத்தை திரும்பப்பெறாமல்இருக்கின்றனர். இவர்கள், பாலிசி எண், பிறந்ததேதி ஆகியவற்றின் அடிப்படையில்,பாலிசியின் விவரத்தை, பாலிசி எடுத்த இன்சூரன்ஸ்அலுவலகத்தில் பெற முடியும்.அதன்பின், பாலிசி யின் கவரேஜ் தொகையின் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டியஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். அதாவது, பாலிசியின் கவரேஜ்தொகை மிகவும்குறைவாக இருந்தால், முகவரி, புகைப்பட அடையாளச் சான்று, பாலிசி பத்திரம்தொலைந்தவிவரம் கொடுத்து, கிளைம்பெற முடியும். பாலிசியின்கவரேஜ் தொகை அதிகமாக இருந்தால், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து,யாராவது ஒருவரிடம், ‘சூரிட்டி’ வாங்கித் தருமாறு கூறுவர். இதில், ‘பாலிசி என்னுடையதுதான். அதன் ஒரிஜினல்பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில், ஏதாவதுசிக்கல்ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் நானேஏற்கிறேன்’ என, கடிதம்அல்லது’பாண்ட்’ பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்வர். கோரப்படாதஇன்சூரன்ஸ் தொகையைத் திரும்பப் பெற, கீழ்கண்ட ஆவணங்களைசமர்ப்பிக்கவேண்டும். வாரிசுதாரர் மற்றும் பாலிசிதாரரின் தற்போதையமுகவரிச் சான்று;புகைப்படத்துடன் கூடியஅடையாளச் சான்று; பாலிசி பத்திரம்ஒரிஜினல்; பாலிசிப் பத்திரம்தொலைந்து விட்டால், பாலிசியின் எண், பிறந்த தேதி, பாலிசிதாரர் பெயர், பாலிசிஎடுத்தகிளையின் முகவரி கொடுத்து, பாலிசிவிவரத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.   பணத்தைபெறுபவரின் வங்கிக் கணக்கு விவரம், ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால்,அவர்களில் யார் பணத்தைப் பெறவேண்டும் என்பதை, மற்ற வாரிசுகள்நியமனம் செய்துகையெழுத்திட்ட கடிதம்ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.