முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முதுகுளத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சிவனுபூவன் தலைமை வகித்தார். ஆணையாளர் ராதாகிருஷ்ணன், ஆணையாளர் (ஊராட்சிகள்)டி.வி சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஊராட்சி உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் வெளிநடப்பிற்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் தினேஸ்பாபு தலைமை வகித்தார். ஆணையாளர் ராஜீ மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.