இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் உலக விளையாட்டு தினம்

இராமநாதபுரத்தில் உலக விளையாட்டு தினம்

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு உரிமையை வழங்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் ஜூன் 11-ல் உலக விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.’விளையாட்டை தேர்ந்தெடு, ஒவ்வொரு நாளும்’ என்ற மையக் கருத்தை வலியுறுத்தி ஜூன்,11 அன்று ராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இந்நிகழ்வை இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர், ஐ.நா தன்னார்வளருமான சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.




