முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா மற்றும் ஊர்வலம்
நமது சிறப்புச் செய்தியாளர் முஹம்மது துல்கிஃப்லி
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனன விழா ஊர்வலமும், பொதுக்கூட்டமும் 14 ஜனவரி 2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு இளம்பிறை கொடி ஏற்றலும், ஊர்வலமும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க பழைய கட்டிடத்தின் முன்பு நடைபெற்றது.
நிகழ்விற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.எம்.கே. காதர் மைதீன் கொடியேற்றினார்.
இந்நிகழ்வில் சென்னை கிளை ஜமாஅத் மற்றும் மதுரை கிளை ஜமாஅத் தலைவர்களும் பங்கேற்றனர்.
மதியம் 2.30 மணிக்கு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தில் மௌலூது ஷரீப் நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸில் மீலாது விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் டி.எம்.ஏ. முஹம்மது இல்யாஸ் விழாப் பேருரை நிகழ்த்தினார்.
மீலாது விழாவினையொட்டி ஏழை மாணவர்களுக்கு சுன்னத் எனும் மார்க்க கல்யாணம் இலவசமாக செய்து வைக்கப்பட்டது.
மேலும் விபரங்களுக்கு விழா அழைப்பிதழைக் காணவும் :