ஊமைப் பெண் மானபங்க முயற்சி:டாஸ்மாக் ஊழியர், ஆதரவாளர் கைது
முதுகுளத்தூர் அருகே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக டாஸ்மாக் ஊழியர் மற்றும் அவரது ஆதரவாளரை தேரிருவேலி போலீஸார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தில் தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்த காது கேளாத, ஊமைப் பெண்ணை, அதே கிராமத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஜெயக்குமார் என்பவர் மானபங்கம் செய்ய முயன்றதாக, அப்பெண்ணின் கணவர் புகார் செய்தார். இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்த தேரிருவேலி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கைது செய்து காவலில் வைத்தார். தகவலறிந்த அவரது நண்பர், அரசரடிவண்டல் தொடக்கப்பள்ளி ஆசிரியரான ஜெயசீலன், குடிபோதையில் வந்து ஜெயக்குமாரை வெளியில் விடுமாறு போலீஸாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.