திருச்சியில் கே.ஜே.எஸ். டிரேடிங் கம்பெனி திறப்பு விழா
திருச்சி : திருச்சி டவுண் காஜி முதுகுளத்தூரைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் கே.ஜே. ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களுக்குச் சொந்தமான கே.ஜே.எஸ். டிரேடிங் கம்பெனி திறப்பு விழா 16.01.2014 திருச்சி – 9, வயலூர் மெயின் ரோட்டில், 1/370 கோல்டன் நகரில் சிறப்புற நடைபெற்றது.
மௌலானா மௌலவி ஷைகுல் ஹதீஸ் அல்ஹாஜ் முஃப்தி அல்லாமா ஏ.கே. அஹ்மது கபீர் ஹஜ்ரத் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம், முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் உதவித் தலைவர் ஏ அஹமது இம்தாதுல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிறுவனம் மேலும் தழைத்தோங்க முதுகுளத்தூர்.காம் வாழ்த்துகிறது.