மலேசியாவில் தூரிகை மாத இதழ்
என் பெயர் தேசிகன். மலேசியாவில் தூரிகை என்றாரு புதிய மாத இதழை நடத்திக் கொண்டிருக்கிறேன். இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த இதழின் முதன்மை நோக்கம். அதற்காக உலக தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து படைப்புகள் பெற்று இதில் வெளியிட எண்ணம் கொண்டுள்ளேன்.
இந்த இதழில் வெளிவரும் படைப்புகள் தீவிர வாசிப்புக்கு அவர்களை நகரச் செய்வதற்கு உதவும்.
நீங்களும் நமது இதழில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். சிறுகதை, கவிதை, கட்டுரை என்று எதுவானாலும் எனக்கு தொடர்ந்து அனுப்புங்கள்.
மிக முக்கியமாக எனக்கு அனுப்பி வைக்கும் படைப்புகளோடு உங்களைப் பற்றிய சிறு குறிப்பு மற்றும் புகைப்படத்தோடு அனுப்பி வையுங்கள். இது புதிய இளம் வாசகர்களிடம் உங்களை கொண்டு சேர்க்க உதவியாக இருக்கும்.
படைப்புகள் அனுப்ப: editor.thurigai@gmail.com
அலைபேசி எண்: +60164552287