வீட்டில் தீப்பிடித்து மின்சாதன பொருள்கள் சேதம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் வியாழக்கிழமை வீட்டில் தீப்பிடித்ததில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

 மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் நாயக்கமார் தெருவில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் வீட்டில் இன்வெட்டரில் மின் அழுத்தம் தாங்காமல் அது வெடித்ததில் தீப்பிடித்தது. இதில் மின் விசிறி, பீரோ, கட்டில், தொலைக்காட்சிப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

News

Read Previous

தாழ்வாய் நினைக்காதே

Read Next

சித்த மருத்துவ குறிப்புகள் !!!

Leave a Reply

Your email address will not be published.