விஸ்வகர்மா ஜயந்தி விழா
முதுகுளத்தூரில் 10-ஆம் ஆண்டு விஸ்வகர்மா ஜயந்தி விழாவும், 7-ஆம் ஆண்டு விஸ்வகர்மா உற்சவ மூர்த்தி வருடாபிஷேக விழாவும் நடைபெற்றன.
முதுகுளத்தூர் வடக்கூர் ஆசாரி தெருவில் அமைந்துள்ள சுந்தரவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஜயந்தி விழாவுக்கு வட்டாட்சியர் சி.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.விஸ்வகர்மா சங்கத் தலைவர் எஸ்.பாலகுருசாமி, பொற்கொல்லர் சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன், ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்க தலைவர் என்.வி.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயந்தி விழாவில் அதிகாலையில் கணபதி ஹோமம், விஸ்வகர்மா ஹோமம், ஸ்ரீ சுந்தர விநாயகர் மற்றும் விஸ்வகர்மா உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முக்கிய வீதிகளில் விஸ்வகர்மா உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 38-ஆம் ஆண்டு பொங்கல் விழாவும், மதியம் பொது அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றன. விழா முடிவில் ஆர்.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.