கன மழையால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேக்கம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் சனிக்கிழமை இரவில் பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி பயணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

முதுகுளத்தூரில் சனிக்கிழமை இரவு சுமார் 2 மணிநேரம் மழை பெய்தது. பேருந்து நிலையத்தில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. பேருந்துகள் உள்ளே வர முடியாமல் சிரமப்படுகின்றன. தண்ணீரை வெளியேற்றுவதற்கு பேரூராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, 6-வது வார்டு கவுன்சிலர் எம்.சேகர் கூறுகையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பெய்வது வழக்கம். அடிக்கடி பேருந்து நிலையத்தில் மழை தண்ணீரை வெளியேற்றுவது பேரூராட்சி நிர்வாகத்தினால் முடியாது. எனவே மழை நீர் வழிந்தோட தேவையான நடவடிக்கையை பேரூராட்சி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

News

Read Previous

விஸ்வகர்மா ஜயந்தி விழா

Read Next

வீடுகளில் பொக்கிஷம் புத்தகங்கள்

Leave a Reply

Your email address will not be published.