வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
முதுகுளத்தூரில் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
முதுகுளத்தூர் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம், மூத்த வழக்குரைஞர் கே.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சங்க நிர்வாகிகள் சி.காசிலிங்கம், சி. திருக்கண்ணன், ஏ.அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், வழக்குரைஞர்கள் சங்கத்தின் புதிய தலைவராக டி.ராஜசேகர் தேர்வு செய்யப்பட்டார். செயலராக ஆர்.முருகேசன், பொருளாளராக எம்.சிவராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஏ.மயில்வேல், துணைச்செயலர்களாக எம்.கோவிந்தராமு, செயற்குழு உறுப்பினர்களாக ஏ.ஆர்.கோபாலகிருஷ்ணன், ஜி.சரவணன், டி.நாகநாதன், எம்.ஜோதி முருகன், எஸ்.ஏ.அப்துல்சமது சேட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்