முதுகுளத்தூர் மின்வாரியத்திடம் வர்த்தக சங்கம் கோரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர் உதவி மின் பொறியாளரிடம்,  நகர் வர்த்தக சங்கத் தலைவர் வி.கருப்புசாமி, செயலாளர் என்.செய்யது அப்தாஹிர், பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக் கொடுத்தனர்.

அந்த மனுவில், முதுகுளத்தூர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 15 நாள்களாக அறிவிப்பு இல்லாமல் மின் தடை செய்யப்பட்டு வருவதால் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மின்தடைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும், என தெரிவிக்கப்பட்டது.   இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் பொறியாளர் உறுதியளித்துள்ளார்.

News

Read Previous

இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக்கலை : வீடியோ பதிவு

Read Next

புதிய ஆசிரியன்

Leave a Reply

Your email address will not be published.