முதுகுளத்தூரில் திமுக தெருமுனை பிரசாரம்
முதுகுளத்தூர் தொகுதியில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் சட்டப்பேரவைக்குள்பட்ட திருவரங்கம், காக்கூர், உலையூர், முதுகுளத்தூர், ஏனாதி, கடலாடி பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை பிரசாரத்துக்கு மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் தலைமை வகித்தார். பிரசாரத்தின் போது தலைமைப் பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் சிறப்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் கே.முனியசாமி, ஒன்றியச் செயலர்கள் ராஜசேகர்(கடலாடி), எஸ்.பூபதிமணி (முதுகுளத்தூர் கிழக்கு), முத்துராமலிங்கம்(மேற்கு), நகரச்செயலர் ஷாஜகான், மாவட்ட துணைச்செயலர் கருப்பையா, அவைத்தலைவர்கள் ராமச்சந்திரன், கதிரேசன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் ஆறுமுகம், பேரூராட்சி துணைத்தலைவர் பாசில் அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.