முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு
முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு
முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கப் பேரணி மற்றும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே பேரணியை முன்னாள் ஆசிரியர் அப்துல்காதர் துவக்கி வைத்தார். ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணிக்கு ஆசிரியர் (ஓய்வு)துரைபாண்டியன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களான யுவராஜ், சண்முகவேல், மங்களநாதன், காளிமுத்து,முத்திருளாண்டி, பவுல்,திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேரிருவேலி முக்குரோடு, தேவர்சிலை வழியாக பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது. பேரணிக்கு பின் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை சங்கத்தின் மாவட்ட செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி துவக்கி வைத்தார். கிளை செயலாளர் வழக்குரைஞர் சந்திரசேகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி.உதயசூரியன், வட்டாட்சியர் (ஓய்வு )கதிரேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். கிளை பொருளாளர் குருசாமி நன்றியுரை கூறினார்.