முதுகுளத்தூரில் சாலையோர கடைகள் அகற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் மற்றும் தேவர் சிலைக்கு முன்பு சாலையோரத்தில் இருக்கும் பழக்கடை, காய்கறிக்கடை என 50க்கும் மேற்பட்ட கடைகள் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றம் செய்யப்பட்டன.
கடைகளை அகற்றும் பணியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் கே.கே.கோவிந்தன், டி.எஸ்.பி நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.