முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூரில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் காவல்நிலையம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரணியானது முதுகுளத்தூர் பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை வழியாக காவல்நிலையத்திற்கு சென்று நிறைவு பெற்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை சார்பு- ஆய்வாளர் நரசிங்கமூர்த்தி வழங்கினார்.
பேரணியில் முதுகுளத்தூர், பேரையூர், தூவல்,தேரிருவேலி காவல் நிலைய சரக நான்கு சக்கரவாகனம் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பேரணியில் சாலையில் விபத்துகளை தவிர்த்து பாதுகாப்பாக செல்வது குறித்தும்,ஓட்டுநர் உரிமம் பெறுவது,மதுபோதையில் வாகனங்களில் செல்லக்கூடாது,தலைக்கவசம் கட்டாயம் அணிவது குறித்தும்,சாலை விதிக்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கப்பட்டது.