முதுகுளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா
முதுகுளத்தூர் தேவேந்திரர் நகர் இளைஞர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு கிராமத் தலைவர் இம்மானுவேல் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்பயிற்சி கூடத்தை கிராமத் தலைவர் திறந்து வைத்தார். முன்னதாக இளைஞர் சங்க தலைவர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோசுவா அன்புரோஸ், சம்பத், ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இளைஞர் சங்க ஒருங்கிணைப்பாளர் தேவசித்தம் நன்றி கூறினார்.
Tags: சமத்துவப் பொங்கல் விழா