இறுதி தீர்ப்பு
இறுதி தீர்ப்பு
நாக்கு சுவைக்க
அறுவகைப் பூ!
நாளும் பொழுதும்
நவரசங்களின் பொறுப்பு!
உள்ளம் வேண்டுவது
வெள்ளைச் சிரிப்பு!
கள்ளத்தினால் சேர்க்கும்
செல்வம் கருப்பு!
சட்டத்தின் ஓட்டைகள்
கரன்சியால் அடைப்பு!
பொய்மைக்கு வாய்க்கும் மதிப்பு
வாய்மை தவிக்கும் பெரும்தவிப்பு!
அரிது அரிது மானிடப் பிறவி
அறிந்து நடந்தால் கிடைக்கும் சிறப்பு!
இறுதி நாளில் உண்டு
இறைவனின் தீர்ப்பு
இதை அறியாத மனித மனம் வியப்பு!!!
– நர்கிஸ் பானு