முதுகுளத்தூரில் கட்டிட மாடிகளின் சுவர்களில் மின் இணைப்பு வயர்கள்: விபத்து அபாயத்தில் மக்கள்
முதுகுளத்தூர் :
முதுகுளத்தூர் பஜார் பகுதியில் உள்ள மின் கம்பங்களிலிருந்து, குருவி கூடுபோல், கடைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஜார் பகுதியில் பல அறைகள் ஒரே கட்டிடத்திற்கு பல மின் இணைப்புகள், அக்கட்டிடத்தின் சுவர் ஓரங்களில் மின் வயர்கள் செல்வதால் மாடிகளில் உள்ள அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு வரும் மாணவர்கள், பொதுமக்கள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த பல மாணவர்கள், பொதுமக்கள் மாடிகளிலிருந்து அலுவலகங்களுக்கு செல்ல தயக்கம் காட்டி வருவதால், தொழில் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் விபத்து அபாயத்தில் உள்ள மின் வயர்களை சீரமைக்க மின் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.