முதுகுளத்தூர் அருகே இடநெருக்கடியால் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே இடநெருக்கடியால் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம்

முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தில், உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருவதால், இட நெருக்கடியால், மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கீரனூர் அரசு நடு நிலைப்பள்ளி, கடந்த 2009 ஜூலையில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 102 மாணவர்கள் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு 6 ஆண்டுகளாக அரசு நிதியிலிருந்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கவில்லை.

இதனால் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள், தொடக்கப்பள்ளி கட்டிடத்திலும், சில நேரங்களில் மரத்தடி நிழலில் அமர்ந்தும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மழை காலங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை அமைத்து தர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையீடு செய்தும், நடவடிக்கை இல்லை.

இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் தங்களது குழந்தைகளை முதுகுளத்தூர் அபிராமம் உள்பட பல பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

News

Read Previous

முதுகுளத்தூரில் கட்டிட மாடிகளின் சுவர்களில் மின் இணைப்பு வயர்கள்: விபத்து அபாயத்தில் மக்கள்

Read Next

கவிதையும் கற்பனையும்

Leave a Reply

Your email address will not be published.