மின்னல் தாக்கி மாடு பலி
முதுகுளத்தூர் அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் பசு மாடு பலியானது.
முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மனைவி காளியம்மாள். இவர் அங்குள்ள வயல் காட்டில் திங்கள்கிழமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் மழை பெய்தது. இதில் பசு மாடு ஒன்று மின்னல் தாக்கிய பலியானது.
இது குறித்து காளியம்மாள் தேரிருவேலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சார்பு ஆய்வாளர் அருள்பிரகாஷ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் விசாரணை நடத்தினார்.