மின்னல் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1.50 லட்சம் வழங்கல்
முதுகுளத்தூர் வட்டம் சாத்தனூர் அருகே ஏ.நெடுங்குளத்தில் வயலில் மிளகாய் பழம் பறிக்க சென்ற 2 பெண்கள், மின்னல் தாக்கியதில் அண்மையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 1.50 லட்சத்திற்கான காசோலையை எம்.எல்.ஏ முருகன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
முதுகுளத்தூர் அருகே உள்ள ஏ.நெடுங்குளத்தைச் சேர்ந்த தேவராஜ் மனைவி அனுராதா (27). அதே கிராமத்தைச் சேர்ந்த பெத்தம்மாள் மனைவி இந்திரா (45). இவர்கள் இருவரும் சாத்தனூர் கிராமத்திற்கு அருகில் மிளகாய் பறிக்கச்சென்ற போது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இடர்பாடுகளுக்கான இறப்பு நிதியாக தலா 1.50 லட்சத்திற்கான காசோலையை முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் கர்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் காட்டுராஜா,கவுன்சிலர் மலைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.