231 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்
முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை 231 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகைக்கான காசோலையை எம்.எல்.ஏ. முருகன் வழங்கினார்.
விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் ஆர் .தர்மர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி இருளாண்டி, ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் உடை. எம். சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, கவுன்சிலர்கள் வேலுச்சாமி, கோபால், தனசேகரன்,அண்ணா தொழிற்சங்க தலைவர் சேதுபதி, கூட்டுறவு சங்க தலைவர் பரம்பொருள் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.