நினைவு தினம் அனுசரிக்கத் தடை:வீடுகளில் கறுப்புக்கொடி
முதுகுளத்தூர் அருகே ஐவர் நினைவு தினம் கடைப்பிடிக்க போலீஸார் தடை விதித்துள்ளதால் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஐவர் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்.14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கீழத்தூவலில் உள்ள ஐவர் நினைவிடத்துக்கு வெளியூரைச் சேர்ந்தவர்கள் வர போலீஸார் தடை விதித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழத்தூவல், மேலத்தூவல் கிராமங்களில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். இதனால் கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.