தேசிய பார்வர்ட் பிளாக் வேட்பாளர் அறிமுக கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தேவர்மஹாலில் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பி.டி.அரசகுமார் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் பேசியதாவது: நான் தேர்தலில் வெற்றி பெற்றால், ராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வழிவகுப்பேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவேன்.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளான திருச்சுழி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடனை, அறந்தாங்கி வரை தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் எனகுறிப்பிட்டார்.  கூட்டத்தில் மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன், மாவட்டச் செயலர் உமா மகேஸ்வரன், பார்வர்ட் பிளாக் தேர்தல் பொறுப்பாளர் பூமிநாதத்தேவர், கடலாடி ஒன்றிய செயலாளர் வெற்றிமாலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

News

Read Previous

முழுமையானதொரு பெண்மணி

Read Next

ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டி மெட்ஸ் பள்ளி ஆண்டு விழா

Leave a Reply

Your email address will not be published.