தீவிரவாத எதிர்ப்பு தினம்: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீவிரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கீழத்தூவல், திருவரங்கம் ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் ஆலோசனையின் பேரில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில், டி.எஸ்.பி. நடராஜன், இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற்றன.
பேச்சுப் போட்டியில் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர். அபிநயா (12 ஆம் வகுப்பு)முதல் பரிசும், ஆர். ரஞ்சித்
(8ஆம் வகுப்பு) இரண்டாம் பரிசும், எம்.பாத்திமா சித்திகா (11 ஆம் வகுப்பு) மூன்றாவது பரிசும் பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில் பள்ளிவாசல் பள்ளி மாணவி எம். பாத்திமாசித்திகா முதல் பரிசும், திருவரங்கம் திருஇருதய மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.ஆரோக்கிய அஜய் (9 ஆம் வகுப்பு) இரண்டாம் பரிசும், கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நாகஜோதி (12 ஆம்வகுப்பு) மூன்றாவது பரிசும் பெற்றனர்.
போட்டியில் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஓய்வுபெற்ற தொடக்கக் கல்வி அலுவலர் தமிழாசிரியர் லெட்சுமணன், தனிப்பிரிவு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், ஆசிரியர் ஏ.ஹபிப் முகம்மது ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.