கன்னிராஜபுரத்தில் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரியில் 5ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆண்டு விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ரமணி பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பெர்லின் ஆனந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விக்ரமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தேசியக் கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஜெயவீரபாண்டியன் ஏற்றிவைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் டி.சி. பாண்டியன், மானுவேல், சுசீலா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியை விஜயா நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

தீவிரவாத எதிர்ப்பு தினம்: மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

Read Next

மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

Leave a Reply

Your email address will not be published.