சோணைமீனாள் கல்லூரியில் கண் சிகிச்சை முகாம்
முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்காலில் உள்ள சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சனிக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமில் கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். பரமக்குடி வாசன் கண் மருத்துவமனை தலைமை அலுவலர் ஜோசப் ரஞ்சன் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பேராசிரியர் ஆர்.அதிசயம் வரவேற்றார். கண் மருத்துவ உதவியாளர்கள் வேதரோபின், திருச்செல்வி, சுடலை, அருள்மணி, ராஜேஸ்வரி, பூங்கொடி ஆகியோர் 300 மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
முகாமுக்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வி.வேலவன், கே.மலர்விழி ஆகியோர் செய்திருந்தனர். முகாம் முடிவில் பேராசிரியர் திலீப்குமார் நன்றி தெரிவித்தார்.