சுவர் இடிந்து விழுந்து 7 ஆடுகள் பலி
முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தில் தொடர் மழையால் வியாழக்கிழமை மண் சுவர் இடிந்து 7 ஆடுகள் உயிரிழந்தன.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர் வளர்த்து வந்த ஆடுகளை வீட்டிற்குள் கட்டிப்போட்டுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுவர் சரிந்து விழுந்தது. இதில் 7 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.