சுவர் இடிந்து விழுந்து 7 ஆடுகள் பலி

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தில் தொடர் மழையால் வியாழக்கிழமை மண் சுவர் இடிந்து 7 ஆடுகள் உயிரிழந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர் வளர்த்து வந்த ஆடுகளை வீட்டிற்குள் கட்டிப்போட்டுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுவர் சரிந்து விழுந்தது. இதில் 7 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.

News

Read Previous

உலக நகரங்களில் மக்களின் உடல நலத்தை கெடுக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளது

Read Next

உலக ஆஸ்துமா தினம்: இந்தியாவில் 3 கோடி பேர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published.