சிக்கல் – முதுகுளத்தூர் ரோடு சேதம்: அல்லல்படும் பயணிகள்
சிக்கல், பி.கீரந்தை, பன்னந்தை வழியாக முதுகுளத்தூர் செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்து இருப்பதால், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.
சிக்கல்- முதுகுளத்தூர் இடையில் பி. கீரந்தை, பன்னந்தை, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, இளஞ்செம்பூர் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மக்கள் அத்தியாவசி பொருட்க் வாங்க சிக்கல், முதுகுளத்தூர் செல்லவேண்டும். போதிய பஸ் வசதி இல்லை. ரோடும் கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக இருக்கிறது.
வாகனங்கள் மெதுவாக செல்வதால், பயணிகள் குறித்த நேரத்தில் செல்லமுடியவில்லை. பள்ளி மாணவர்கள் சைக்கிள் பஞ்சராகி விடுகிறது. தள்ளிக்கொண்டு செல்வதால், குறித்து நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் கல்வி பாதிக்கப்படுகிறது.
வாலிநோக்கம் அருகே தனிச்சியம் ,சேரந்தை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பத்து கிராமங்கள் உள்ளன. இவர்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக ஏர்வாடி, வாலிநோக்கம், சாயல்குடி பகுதிக்கு சென்று வருகின்றனர். ஓரிரு பஸ்கள் மட்டுமே இவ்வழித்தடத்தில் இயக்கப்படுவதால், வாடகை வாகனங்களையே நம்பி உள்ளனர். இதனால், 7 ரூபாய்க்கு பதில், 15 ரூபாய் கொடுத்து பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. கூடுதல் வாடகை கொடுத்தாலும் வாடகை வாகனங்கள் வர மறுக்கின்றன. இதனால், ஐந்து கி.மீ., நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.நரிப்பையூர் கடற்கரை செல்லும் ரோடு, கற்கள் பெயர்ந்து சிதைந்துவிட்டது. வியாபாரிகள் வரத் தயங்குவதால், பிடித்த மீன்களை விற்பனை செய்ய முடியாமல், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சி தலைவர் அன்புச்செல்வி கூறுகையில், “”நிதி ஒதுக்கியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விரைவில் பணி நடக்கும்,” என்றார்.
மூன்று பகுதிகளில் உள்ள ரோட்டை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.