சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றி பள்ளி மாணவி சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸ் சரகத்தில் சமையல் செய்தபோது உடலில் தீப்பற்றியதில் காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.
முதுகுளத்தூர் அருகே கே.ஆர். பட்டணத்தைச் சேர்ந்த சோலைப்பன் மகள் மதுமிதா (16). திருவரங்கம் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மதுமிதா வீட்டில் சமையல் செய்வதற்கு மண்ணெண்ணெயை அடுப்பில் ஊற்றியபோது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பற்றியதாக கூறப்டுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மதுமிதாவுக்கு பரமக்குடி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் காவல்நிலையத்தில் கொடுத்த மதுமிதாவின் தந்தை சோலைப்பன் கொடுத்த தகலின் பேரில் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

News

Read Previous

சிலம்பாட்டம், கம்பு ஊன்றி தாண்டுதல்: முதுகுளத்தூர் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி

Read Next

சாரண பாஸ்கரனார்

Leave a Reply

Your email address will not be published.