கூட்டுறவு சங்கங்களுக்கு புனரமைப்பு நிதிவழங்கக் கோரி தீர்மானம்
முதுகுளத்தூரில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களுக்கு புனரமைப்பு நிதி வழங்கக் கோரி வியாழக்கிழமை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதுகுளத்தூர் வட்டார தொடக்கக் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். பொருளாளர் கருப்பணன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் செயல் இழந்த சங்கங்களின் மேம்பாட்டுக்காக கடந்த ஆட்சியில் பல சங்கங்களுக்கு புனரமைப்பு நிதி வழங்கியதில் சில சங்கங்களுக்கு முழுமையாகவும் சில சங்கங்களுக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்பட்டன.
இன்னும் வர வேண்டிய தொகை மீதி சங்களுக்கு பின்னர் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினாó. தற்போது கூட்டுறவு சங்கங்களின் செயல் திறன்கள் குறையும் அபாய நிலையில் உள்ளன. சம்பளம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற நிலையில் பணியாளர்கள் பணி செய்கின்றனர்.
எனவே உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.