காவல்துறை-பொது மக்கள் நட்புறவு விளையாட்டு போட்டி
முதுகுளத்தூர், கடலாடி ஆகிய இடங்களில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.கணபதி தலைமையில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி, வாலிபால், கோலப்போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளுக்கு முதுகுத்தூர் காவல் ஆய்வாளர் கண்ணன், கடலாடி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், சார்பு ஆய்வாளர்கள் காசிராஜன், நரசிங்கமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை கண்காணிப்பாளர் ஆர்.கணபதி பரிசுகளை வழங்கினார். முடிவில் சார்பு-ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.