ஊருணியில் கலக்கும் கழிவு நீர்: கிராம மக்கள் புகார்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழமானாங்கரை குடிநீர் ஊருணியில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காத்தாகுளம் ஊராட்சி, கீழமானாங்கரை கிராமத்தில், குடி நீர் ஊருணி உள்ளது. இதில். முதுகுளத்தூர் நகர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும், கழிவுநீர் தரிசு நிலத்தில் விடப்படுகிறது. கழிவு நீர் வயல்வழியாகச் சென்று, கீழமானாங்கரை ஊருணியில் கலந்து விடுகிறது.

இதனால் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, ஊருணியில் கழிவு நீர் கலப்பதை தடுத்த நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News

Read Previous

கவிதையும் கற்பனையும்

Read Next

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.