இலவச கண் சிகிச்சை முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தில் சோணைமீனாள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் சார்பில் வியாழக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் செல்வநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.செந்தில்குமார், கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, கிராமத் தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் பி.நவநீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கே.முத்துச்சாமி வாழ்த்துரை வழங்கினார். என்.எஸ்.எஸ். முகாம் திட்ட அலுவலர் பேரசிரியர் வி.வேலவன் வரவேற்றார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சோ.ஐயப்பன், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் கே.பாலசுப்பிரமணியன், கண் மருத்துவ உதவியாளர்கள் கே.தெய்வா, எம்.எஸ்.முருகேசன்,ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.  என்.எஸ்.எஸ் முகாம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.அதிசயம் நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

மக்கள் தொடர்பு முகாம்

Read Next

கபடி போட்டி ஆப்பனூர் அணி வெற்றி

Leave a Reply

Your email address will not be published.