கபடி போட்டி ஆப்பனூர் அணி வெற்றி

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி கள் நடந்தன.
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கபடி போட் டிகளை எம்எல்ஏ முருகன் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண் டன. இரவு பகலாக போட் டிகள் நடந்தன.

இதில் ஆப்பனூர் அணி முதல் பரிசு பெற்றது. முதுகுளத்தூர் ஏஞ்சல் அணி 2ம் இடத்தையும், வீரம்பல் அணி 3ம் இடத்தையும் பிடி த்தன. செக்கடி செவன்ஸ் அணி 4ம் இடத்தை பிடித் தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்எல்ஏ முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், மலைக்கண்ணன், மாட சாமி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

இன்ஸ்பெக்டர் ஜேசு, எஸ்ஐ சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை முதுகுளத்தூர் ஏஞ்சல் அணியினர் செய்தனர்.

News

Read Previous

இலவச கண் சிகிச்சை முகாம்

Read Next

மூன்றாம் தலைமுறை பேஷ் இமாம் … !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *