அ.தி.மு.க.வினர் பால்குடம் எடுத்து வழிபாடு

Vinkmag ad

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி முதுகுளத்தூரில், சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் எம். முருகன் தலைமையில் சுப்பிரமணியர் கோயிலில் பால்குடம் எடுத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

முருகன், விநாயகர் சிலைக்கு முன்பு பல்வேறு யாகம் மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு எம்.எல்.ஏ முருகன் தலைமையில் அதிமுகவினர் பால்குடம் எடுத்து கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து பால் அபிஷேகம் செய்தனர்.

இதில் பேரவை பொருளாளர் எஸ்.மலைக்கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுதந்திராகாந்தி இருளாண்டி, கவுன்சிலர்கள் உடை.எம்.சிவக்குமார், சீனி முகம்மது, தூரி மாடசாமி, விவசாய அணி அழகர்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் பரம்பொருள் காளிமுத்து, துணைத்தலைவர் ஹபிப் முகம்மது, அண்ணா தொழிற்சங்க செயலர் சேதுபதி, இளம்பெண்கள் பாசறை மாரி, துணைச்செயலர் பூமிநாதன், முருகவேல் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

Read Next

முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

Leave a Reply

Your email address will not be published.