அரசு – கல்லூரி பஸ்கள் மோதல்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து சிக்கலுக்கு சென்ற அரசு பஸ்சும், சாயல்குடியில் இருந்து முதுகுளத்தூர் வந்த தனியார் கல்லூரி பஸ்சும் கடலாடி விலக்கு ரோட்டில் மோதிக் கொண்டன. பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக காயமின்றி மக்கள் தப்பினர். குறுகலான விலக்கு ரோட்டில் ஏற்பட்ட விபத்தால் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
இங்கு விபத்துக்களை தடுக்கும் வகையில், “சிக்னல்’ அல்லது போக்குவரத்து போலீசாரை நியமிக்க, “தினமலர்’ நாளிதழ் பலமுறை வலியுறுத்தியது. இந்நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் விபத்துகள் தொடர்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.